இன்றைய தினம் வியாழன் மாலை தீவகம் மண்கும்பான் பகுதியில் அமைந்துள்ள-செட்டிகாட்டு நீர்வழங்கும் மையத்திலிருந்து நூறு மீற்றர் தொலைவில் அமைந்துள்ள தெற்கு கடற்கரையில் 30 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக-எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.அதே போல் வேலணை துறையூரை அண்மித்த கடற்கரைப்பகுதியிலும் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நேற்றய தினம் புங்குடுதீவு கடற்கரையிலும் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
கரையொதுங்கும் இச்சடலங்கள்-கடந்தவாரம் அவஸ்ரேலியாவுக்கு சென்ற போது விபத்துக்குள்ளான படகில் பயணித்தவர்களுடையதாக இருக்கலாம் என்று பொலிஸ்தரப்பால் நம்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக