மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

நிழல் கொடுத்து பசி தீர்க்கும் “அமுதசுரபி” அமைந்த புண்ணிய பூமி நயினாதீவு.

அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் சிறப்பித்துச் சொல்லக்கூடியதும் தீவகத்திற்கே பெருமை சேர்த்துக்கொண்டிருப்பதுமான நயினாதீவு ஸ்ரீ நாகபூசனியம்மன் ஆலயம் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமாகும்.

திருவருள் மிகு நாகபூசனியம்மனின் தெய்வீக அருளுடன் அம்பாளை நித்தம் தரிசிக்க வரும் அடியவர்களுக்கெல்லாம் நித்திய அன்னதானத்தினை வழங்கி வருகிறது அமுத சுரபி அன்னதான சபை.

மிகவும் மகத்தான சேவையை வழங்கி வரும் அமுதசுரபி அன்ன தான சபையானது தனது அளப்பரிய சேவையின் பொருட்டு பல பாரட்டுக்களையும்,விருதுகளையும் பெற்ற பெருமையினை கொண்டது.

அம்பாளின் வருடாந்த உயர்திருவிழா எதிர்வரும் 09.06.2013  ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்தின் தெற்குப் புற வாசலில் இருந்து அமுத சுரபி அன்னதான சபை வரை அடியவர்களின் பாதங்கைளை கடும் வெயிலில் இருந்து பாதுகாக்கும் முகமாக நிழல் பந்தல்களை அமைத்து வருகின்றனர்.

அமுத சுரபி அன்னதான சபையின் சிறப்பித்துச்சொல்லக்கூடிய இத்தகைய சேவை அம்பாளின் உயர் திருவிழாவினை முன்னிட்டு ஆலயத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான அடியவர்களுக்கு மிகுந்த வரப்பிரசாதமாக இருக்கும் என்பது நிதர்சனம்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி