மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

அடுத்து வரும் நாட்களில் பிரான்ஸில் உயரும் வெப்பநிலை-பொதுமக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!விபரங்கள் இணைப்பு!

பிரான்ஸ் முழுவதும் அடுத்து வரும் திங்கட்கிழமையிலிருந்து மிகக் கடுமையான வெப்பத்தைப் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலைகள் (caniculaire) தாக்க உள்ளதாகவும் செய்திகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகக்குறைந்த வெப்பநிலை 20° ஆகவும்-அதிகூடிய வெப்பநிலை தென்பகுதியில் 35° யைத் தாண்டியும்  அமைய உள்ளதாவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் வெப்பமானது எதிர்வரும் வாரம் முழுவதும் நீடிக்க உள்ளது என வானிலை மையங்கள் எச்சரித்துள்ளன. இந்த வெப்பத்தின் முடிவில் கடுமையான புயல் மழை ஏற்படும் என்றும் அஞ்சப்படுகின்றது.




தென்கிழக்குப் பகுதியில் இருந்து வரும் வெப்பக்காற்று பிரான்ஸைக் கடப்பதனாலேயேயும் -பிரித்தானியாவின் தீவுகளில் இருந்து வரும் எதிர்ச்சூறாவளியினாலுமே (anticyclone) இந்த வெப்பநிலை உயர்வு ஏற்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
வெப்பத்தை கட்டுப்படுத்த நீங்கள் செய்ய வேண்டியவை!

தாகத்திற்காகக் காத்திராமல் அடிக்கடி நீர் அருந்த வேண்டும்.

நாளின் நண்பகல் வேளைகளில் அதி கூடிய வெப்பம் இருக்குமாகையால் கூடிய அளவு வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்

வெளிர்மையான நிறங்கள் உள்ள மெல்லிய துணிகளினால் ஆன பருத்தி உடைகளை அணியவும். கறுப்பு நிறத்தைத் தவிர்க்கவும். கறுப்பு நிறம் வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டது.

வீடுகளின் யன்னல்களின் வெளிப்புற அடைப்புகளைச்  (Volets - Shutters) சாத்திவிட்டு யன்னல்களைத் திறந்து விட்டுக் காற்றோட்டம் உள்ளவாறு பார்த்துக் கொள்ளவும். மின்விசிறிகளையும் பயன்படுத்தவும்.

அடிக்கடி குளிக்கவும். உடலைத் துவட்டாது விடவும்.

வயதானவர்களையும் குழந்தைகளையும் வெப்பத்திலிருந்து பாதுகாக்கவும்.

நன்றி-பரிஸ் இணையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முக்கிய செய்தி